Mar 17, 2026
Thisaigal NewsYouTube
இபிஃஎப் சந்தாதாரர்களுக்கு கூடுதல் லாப ஈவு கிடைக்கலாம்
தற்போதைய செய்திகள்

இபிஃஎப் சந்தாதாரர்களுக்கு கூடுதல் லாப ஈவு கிடைக்கலாம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.17-

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஃஎப், தனது சந்தாதாரர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கு கூடுதல் லாப ஈவு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டில் முதல் ஒன்பது மாதங்கள் வரலாறு காணாத அளவிற்கு முதலீட்டு வருவாயை இபிஃஎப் பதிவு செய்துள்ளதால், அதன் பலாபலன் சந்தாதார்களையும் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டு வருவாயில் இரட்டை இலக்க வளர்ச்சியை இபிஃஎப் பதிவுச் செய்துள்ளதாக அந்த வாரியம் இன்று அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி தொடங்கி, செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியுடன் மொத்த முதலீட்டு வருமானத்தை 63.99 பில்லியன் ரிங்கிட்டை இபிஃஎப் பதிவுச் செய்துள்ளது.

இது 2024 இல் பதிவுச் செய்யப்பட்ட 57.57 பில்லியன் ரிங்கிட்டை விட 11 விழுக்காடு அதிகமாகும். இந்த வெற்றிகரமான பதிவின் மூலம் 2025 ஆம் ஆண்டு சந்தாதார்களுக்கான லாப ஈவாக இபிஃஎப் கூடுதல் தொகையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பேங்க் முவாமாலாட் மலேசியா பெர்ஹாட்டின் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமட் அஃப்ஸானிஸாம் அப்துல் ரஷிட் ஆருடம் கூறியுள்ளார்.

முதலீட்டின் மதிப்பையும், தரத்தையும் தீர்மானிப்பதில் இபிஃஎப் தருணம் பார்த்து செயல்படும் நடவடிக்கைகள் ஆக்ககரமான பலனைத் தந்துள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு