Mar 11, 2026
Thisaigal NewsYouTube
80 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டைத் தரும்படி கேசவனுக்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

80 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டைத் தரும்படி கேசவனுக்கு உத்தரவு

Share:

தம்முடைய நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உதவியாளரான இந்திராணி இராமசாமிக்கு 80 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டை வழங்கும்படி சுங்கை சிப்புட் நாடாமன்ற உறுப்பினர் எஸ். கேசவனுக்கு புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கேசவனுக்கு எதிராக இந்திராணி இராமசாமி தொடுத்திருந்த அவதூறு வழக்கு மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த போதிலும் இந்திராணியின் மனுவை அப்பீல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ ஶ்ரீ கமாலுடின் முகமட் சைட், கேசவனுக்கு எதிராக இந்திராணி இராமசாமி தொடுத்திருந்த வழக்கில் தகுதிபாடுயிருப்பதாக தீர்ப்பில் தெரிவித்தார்.

கேசவனிடம் தாம் உதவியாளராக பணியாற்றியிருந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் காலகட்டத்தில் அவரிடமிருந்து தாம் பாலியல் தொல்லைகளை எதிர்நோக்கியிருந்ததாக இந்திராணி போலீசில் புகார் செய்து இருந்தார்.

எனினும் அந்த குற்றச்சாட்டை மறுத்த கேசவன், முதலில் தம்மை அணுகியவர் இந்திராணி என்றும், மன உளைச்சலினால் அவதியுறும் இந்திராணி தம்முடைய திருமண வாழ்க்கையை சிதைக்க முயற்சிப்பதாகவும் கேசவன் ஓர் செய்தியாளர் கூட்டத்தின் வாயிலாக விளக்கம் அளித்து இருந்தார்.
எனினும் கேசவனின் இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று கூறி அவருக்கு எதிராக இந்திராணி இந்த அவதூறு வழக்கை தொடுத்து இருந்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு