நெறிமுறையற்ற நடைமுறைகளால் களங்கம் ஏற்பட்டு இருக்கும் நீதிபரிபாலனத்தை மலாய் ஆட்சியாளர்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று அப்பீல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டத்தோ ஹமிட் சுல்தான் ஹாமிட் சுல்தான் பேக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீதிபதிகள் மற்றும் பிராசிகியூஷன் தரப்பினர் உட்பட சட்ட அமலாக்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்கள் செய்கின்ற தவற்றை சரி செய்யும் உரிமையையும், அதிகாரத்தையும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் மலாய் ஆட்சியாளர்கள் கொண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் இறையாண்மையின் மாண்பை கட்டிக்காப்பவர்களாக ஆட்சியாளர்கள் விளங்குவதால் சட்ட அமலாக்கத்தில் ஈடுபடுகின்றவர்கள் செய்கின்ற தவறுகளை திருத்துவதற்கான அதிகாரத்தை மலாய் ஆட்சியாளர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்குவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையல்ஹமிட் சுல்தான் ஹாமிட் சுல்தான் பேக்கர் தெரிவித்துள்ளார்.








