பஹாங், பெந்தோங்கில் நேற்று மாது ஒருவரிடம் கும்பல் ஒன்று கொள்ளையடித்த சம்பவத்தில் மூளையாக இருந்த செயல்பட்டதாக நம்பப்படும் அந்த மாதுவின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டது மூலம் இந்த உண்மை அம்பலமாகியுள்ளதாக பென்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சைஹாம் முஹமாட் காஹார் தெரிவித்தார். காப்புறுதி பணத்தை கோருவதற்காக தமது மனைவிக்கு தெரியாமலேயே 47 வயது நபர், கும்பல் ஒன்றை தயார்ப்படுத்தி, வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதை அந்த மூன்று பேரும் உண்மையை கக்கி விட்டனர் என்று சைஹாம் குறிப்பிட்டார்.
நேற்று பிற்பகல் 3.05 மணியளவில் பெந்தோங், காராக், தாமான் ஹிஜௌ வீடமைப்புப்பகுதியில் பாராங்கை ஆயதமாக கொண்டு வீடு ஒன்றில் நுழைந்த முகமூடி கொள்கைக்கும்பல் ஒன்று, மாதுவை மடக்கி பொருட்களை கொள்ளையடித்ததாக புகார் செய்யப்பட்டு இருந்ததாக சைஹாம் தெரிவித்தார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


