பஹாங், பெந்தோங்கில் நேற்று மாது ஒருவரிடம் கும்பல் ஒன்று கொள்ளையடித்த சம்பவத்தில் மூளையாக இருந்த செயல்பட்டதாக நம்பப்படும் அந்த மாதுவின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டது மூலம் இந்த உண்மை அம்பலமாகியுள்ளதாக பென்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சைஹாம் முஹமாட் காஹார் தெரிவித்தார். காப்புறுதி பணத்தை கோருவதற்காக தமது மனைவிக்கு தெரியாமலேயே 47 வயது நபர், கும்பல் ஒன்றை தயார்ப்படுத்தி, வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதை அந்த மூன்று பேரும் உண்மையை கக்கி விட்டனர் என்று சைஹாம் குறிப்பிட்டார்.
நேற்று பிற்பகல் 3.05 மணியளவில் பெந்தோங், காராக், தாமான் ஹிஜௌ வீடமைப்புப்பகுதியில் பாராங்கை ஆயதமாக கொண்டு வீடு ஒன்றில் நுழைந்த முகமூடி கொள்கைக்கும்பல் ஒன்று, மாதுவை மடக்கி பொருட்களை கொள்ளையடித்ததாக புகார் செய்யப்பட்டு இருந்ததாக சைஹாம் தெரிவித்தார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


