பஹாங், பெந்தோங்கில் நேற்று மாது ஒருவரிடம் கும்பல் ஒன்று கொள்ளையடித்த சம்பவத்தில் மூளையாக இருந்த செயல்பட்டதாக நம்பப்படும் அந்த மாதுவின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டது மூலம் இந்த உண்மை அம்பலமாகியுள்ளதாக பென்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சைஹாம் முஹமாட் காஹார் தெரிவித்தார். காப்புறுதி பணத்தை கோருவதற்காக தமது மனைவிக்கு தெரியாமலேயே 47 வயது நபர், கும்பல் ஒன்றை தயார்ப்படுத்தி, வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதை அந்த மூன்று பேரும் உண்மையை கக்கி விட்டனர் என்று சைஹாம் குறிப்பிட்டார்.
நேற்று பிற்பகல் 3.05 மணியளவில் பெந்தோங், காராக், தாமான் ஹிஜௌ வீடமைப்புப்பகுதியில் பாராங்கை ஆயதமாக கொண்டு வீடு ஒன்றில் நுழைந்த முகமூடி கொள்கைக்கும்பல் ஒன்று, மாதுவை மடக்கி பொருட்களை கொள்ளையடித்ததாக புகார் செய்யப்பட்டு இருந்ததாக சைஹாம் தெரிவித்தார்.

Related News

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு


