Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பிரேதப் பரிசோதனைக்கு ஸாராவின் தாயார் மறுப்பு தெரிவித்து விட்டார் - நீதிமன்றத்தில் மருத்துவர் தகவல்!
தற்போதைய செய்திகள்

பிரேதப் பரிசோதனைக்கு ஸாராவின் தாயார் மறுப்பு தெரிவித்து விட்டார் - நீதிமன்றத்தில் மருத்துவர் தகவல்!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்ப.17-

மாணவி ஸாரா கைரினா மகாதீரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதில் பிரேதப் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து அவரது தாயாருக்கு விளக்கப்பட்ட போதிலும், அவர் அதனை மறுத்து விட்டார் என மருத்துவர் ஒருவர் மரண விசாரணை நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

குயின் எலிஸபெத் மருத்துவமனையின் தடயவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் லோகராஜ் ரத்னா, இது குறித்து மரண விசாரணை நீதிமன்றத்தில் இன்று அளித்துள்ள தகவலில், பிரேதப் பரிசோதனைக்கான கோரிக்கையைப் போலீசார் வழங்கவில்லை என்றாலும் கூட, உறவினர்களின் அனுமதியோடு அது கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், ஸாராவின் தாயார் புவான் நொராய்டா லாமாட்டிடம் தான் விளக்கமளித்து அதற்கான அனுமதியைக் கேட்டதாகவும், ஆனால் அவர் அதனை மறுத்து விட்டார் என்றும் டாக்டர் லோகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனை செய்யாமல், ஸாராவின் மரணம் தொடர்பான எந்த ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையையும் அவரது குடும்பத்தினரால் எதிர்காலத்தில் பெற முடியாது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்