May 21, 2026
Thisaigal NewsYouTube
பெண் முதலாளியை வெட்டிக்கொன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பெண் முதலாளியை வெட்டிக்கொன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

ஈப்போ,ஜன.11
கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ஈப்போ, மெங்களம்பு, தாமான் ராசி ஜெயா - வில் உள்ள கைப்பேசி விற்பனைக் கடையில் தனது பெண் முதலாளியை கொடூரமாக வெட்டிக்கொன்றதாக அந்த கடையின் பணியாளர் ஒருவர் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

54 வயதுடைய யாப் கோக் மிங் என்ற அந்த பணியாளர் மாஜிஸ்திரேட் சித்தி நோரா ஷாரிஃப் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

சம்பவம் நிகழ்ந்த அன்று கடை முதலாளியான 49 வயதுடைய லீ சியு லியான் என்ற பெண்மணியை கூர்மையான ஆயுதத்தினால் வெட்டிக்கொன்றதாக குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஊடகங்களின் தகவலின்படி சம்பந்தப்பட்ட, நபர் அந்த கடையில் இருந்த பெண் முதலாளியின் ஆண் நண்பரையும் வெட்டி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

Related News