கோலாலம்பூர்,ஜூலை 14-
நேற்று கோலாலம்பூர் Jalan Tun H S Lee dan மற்றும் Metro Pudu சாலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு கேளிக்கை மையங்களை கோலாலம்பூர் நகராண்மை மன்றம் முடக்கி உள்ளது.
கோலாலம்பூரில், கேளிக்கை மையக் லைசென்ஸ் கட்டுபாட்டு பிரிவு , போதை பொருள் மறுப்பு பிரிவு மற்றும் கோலாலம்பூர் இஸ்லாம் மத பிரிவும் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது அவ்விரு கேளிக்கை மையங்களிலும் மதுபானங்கள் மற்றும் கேளிக்கை மையங்கள் நடத்துவதற்கான முறையான லைசென்ஸ் கொண்டிருக்கவில்லை என தெரிய வந்துள்ளதால், அவ்விரு மையங்களும் முடக்கப்பட்டுள்ளதாக நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.








