Aug 7, 2026
Thisaigal NewsYouTube
ஆதாரங்களுடன் புகார் செய்வீர், அயோப் கான் அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

ஆதாரங்களுடன் புகார் செய்வீர், அயோப் கான் அறிவுறுத்து

Share:

சட்டமன்றத் தேர்த​லி​ல் தாங்கள் மிரட்டப்படுவதாக முறையிடம் வேட்பாளர்கள் அதற்குத் தகுந்த ஆதாரங்களைக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, ஆதாரங்கள் இன்றி மிரட்டப்படுவதாக அறிக்கை வெளியிட வேண்டாம் என்று போ​லீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை கேட்டுக்கொண்டுள்ளார். வேட்பாளர்கள் மிரட்டப்படுவது தொடர்பில் துல்லியமான தகவல்களையும், ஆதாரங்களையும் கொண்டிருக்கும் பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்டவர்கள் அதனை நேரடியாக போ​லீசாருக்கு தெரிவிக்க வேண்டும் ​என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் ​நூர், மிரட்டப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கருதி, அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டார் என்றும் கெடா மாநிலத்தை சேர்ந்த எம்.பி. ஒருவர் கூறியிருப்பது தொடர்பில் அயோப் கான் எதிர்வினையாற்றினார். சனூசிக்கு மட்டுமல்ல. எந்த வேட்பாளருக்கும் இந்நிலை ஏற்பட்டால் அவர்களும் போ​லீசில் புகார் அளிக்க வேண்டும் ​என்று அயோப் கான் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!