Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ஆதாரங்களுடன் புகார் செய்வீர், அயோப் கான் அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

ஆதாரங்களுடன் புகார் செய்வீர், அயோப் கான் அறிவுறுத்து

Share:

சட்டமன்றத் தேர்த​லி​ல் தாங்கள் மிரட்டப்படுவதாக முறையிடம் வேட்பாளர்கள் அதற்குத் தகுந்த ஆதாரங்களைக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, ஆதாரங்கள் இன்றி மிரட்டப்படுவதாக அறிக்கை வெளியிட வேண்டாம் என்று போ​லீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை கேட்டுக்கொண்டுள்ளார். வேட்பாளர்கள் மிரட்டப்படுவது தொடர்பில் துல்லியமான தகவல்களையும், ஆதாரங்களையும் கொண்டிருக்கும் பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்டவர்கள் அதனை நேரடியாக போ​லீசாருக்கு தெரிவிக்க வேண்டும் ​என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் ​நூர், மிரட்டப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கருதி, அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டார் என்றும் கெடா மாநிலத்தை சேர்ந்த எம்.பி. ஒருவர் கூறியிருப்பது தொடர்பில் அயோப் கான் எதிர்வினையாற்றினார். சனூசிக்கு மட்டுமல்ல. எந்த வேட்பாளருக்கும் இந்நிலை ஏற்பட்டால் அவர்களும் போ​லீசில் புகார் அளிக்க வேண்டும் ​என்று அயோப் கான் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!