Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

லோ பிள்ளைகள் மீதான வழக்கு: ஏப்ரல் 8 ஆம் தேதி விசாரணை

Share:

புத்ராஜெயா, பிப்.7-

ஒரு தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹோங்கின் மூன்று பிள்ளைகளும் இஸ்லாம் மதத்திற்கே திரும்பித் தரப்பட வேண்டும் என்று பெர்லிஸ் மாநில அரசாங்கம் செய்து கொண்ட சீராய்வு மனு மீதான விசாரணை நடைபெறுவதற்கு கூட்டரசு நீதிமன்றம் ஏப்ரல் 4 ஆம் தேதியை வழக்கு விசாரணை நாளாக நிர்ணயித்துள்ளது.

விசாரணைக்கான புதிய தேதி நிர்ணயிக்கப்பட்டு இருப்பதை பெர்லிஸ் மாநில அரசாங்கம் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் டேனியல் பர்ஹான் சய்னுல் ரிஜால் உறுதிப்படுத்தியுள்ளார்.

வழக்கு விசாரணை தேதியை உறுதி செய்வதறகு வழக்கறிஞர் டேனியலும், லோ சியூ ஹோங்கின் வழக்கறிஞர் A. ஸ்ரீமுருகன் ஆகியோர் இன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

லோ சியூ ஹோங்கின் மூன்று பிள்ளைகள், இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்டதை கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் ரத்து செய்தது. அந்த மூன்று பிள்ளைகளும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று உறுதி செய்து இருந்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த முடிவை சீராய்வு செய்யுமாறு பெர்லிஸ் மாநில அரசாங்கமும், இதர மூன்று தரப்பினரும் மேல்முறையீடு செய்துள்ளனர்.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து