21 குற்றச் செயல்கள் பதிவைக் கொண்டிருந்த டிங்கில் ரவி சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பில் போலீசார் நால்வரை கைது செய்துள்ளனர். கடந்த மே11 ஆம் தேதி அதிகாலை ஒரு மணியளவில் செர்டாங், ஸ்ரீ கெம்பாங்கான், ஜாலான் பண்டார் 1, இல் எவரிடே ஃபூட் கோர்ட் அருகில் ஓர் உணவகத்தில் உணவு அருந்தி விட்டு, நண்பர்களுடன் காரை நோக்கி டிங்கில் ரவி சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
போக்கா மற்றும் சொஸ்மா போன்ற கடும் குற்றவியல் சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனையை அனுபவித்தவரான டிங்கில் ரவி கொலை தொடர்பில் போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் நான்கு நபர்கள் கின்ராரா பகுதியில் பிடிபட்டனர்.
விசாணைக்கு ஏதுவாக அந்த நான்கு நபர்களையும் வரும் மே 18 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஆணையர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


