Sep 5, 2026
Thisaigal NewsYouTube
மீட்புப் பணிகளுக்காக நேபாளத்திற்குப் புறப்பட்டது மலேசியாவின் 'SMART' குழு
தற்போதைய செய்திகள்

மீட்புப் பணிகளுக்காக நேபாளத்திற்குப் புறப்பட்டது மலேசியாவின் 'SMART' குழு

Share:

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ, மலேசியாவின் பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவான SMART இன்று சனிக்கிழமை நேபாளத்துக்கு புறப்படுகின்றது.

நேபாள அரசின் ஒப்புதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

11 பேர் கொண்ட SMART குழுவினர், அதிக திறன் கொண்ட ட்ரோன்கள் மற்றும் சிறப்பு மீட்பு உபகரணங்களுடன் நேபாள அதிகாரிகள் மேற்கொள்ளும் தேடுதல் பணிகளுக்கு உதவ உள்ளனர்.

முன்னதாக, வெளிநாட்டு தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களின் உதவியை நேபாளம் நிராகரித்திருந்தது.

தனது சொந்த மீட்புக் குழுக்களே பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை என அந்நாடு தெரிவித்திருந்தது.

எனினும், பின்னர் ஏற்பட்ட தூதரக ரீதியான அழுத்தங்களைத் தொடர்ந்து தனது முடிவை மாற்றிக் கொண்டது.

இதனிடையே தேவை ஏற்பட்டால் சீன அதிகாரிகளுக்கும் உரிய தேடுதல் மற்றும் மீட்பு நிபுணத்துவ உதவிகளை வழங்க மலேசியா தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேபாளம் மற்றும் சீனாவில் உள்ள 55 மலேசியர்களை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பிடத்தை உறுதி செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

Related News

பினாங்கில் கடும் தீ: கடலோரத்தில் 10 மரக் கட்டிடங்கள் தீக்கிரையாகின

பினாங்கில் கடும் தீ: கடலோரத்தில் 10 மரக் கட்டிடங்கள் தீக்கிரையாகின

போலி அரசு ஆணைகள் மூலம் 3 மோசடி முயற்சிகள்: கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறை எச்சரிக்கை

போலி அரசு ஆணைகள் மூலம் 3 மோசடி முயற்சிகள்: கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறை எச்சரிக்கை

குடிநுழைவுத் துறை வாகன விபத்து: விதிமீறல்கள் குறித்து உள்விசாரணை

குடிநுழைவுத் துறை வாகன விபத்து: விதிமீறல்கள் குறித்து உள்விசாரணை

ஆயுதம், தற்காப்புத் துறையில் மானியம் பெற்றுத்தர 30 ஆயிரம் லஞ்சம்: ஆலோசனை நிறுவன உரிமையாளர் கைது

ஆயுதம், தற்காப்புத் துறையில் மானியம் பெற்றுத்தர 30 ஆயிரம் லஞ்சம்: ஆலோசனை நிறுவன உரிமையாளர் கைது

ஈப்போவில் கும்பல் வெறிச்செயல்: ஓட ஓட வெட்டப்பட்ட நபர் படுகாயம்; 11 பேர் கைது

ஈப்போவில் கும்பல் வெறிச்செயல்: ஓட ஓட வெட்டப்பட்ட நபர் படுகாயம்; 11 பேர் கைது

ஜாலூர் கெமிலாங்கை ஏற்றும் முன் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்  - மலேசியர்களுக்கு தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு அறிவுத்தல்

ஜாலூர் கெமிலாங்கை ஏற்றும் முன் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் - மலேசியர்களுக்கு தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு அறிவுத்தல்