Mar 20, 2026
Thisaigal NewsYouTube
குழந்தைகளுக்கு டிஆர்எஸ் நாற்காலிகள் பொருத்திக் கொள்ளுங்கள்
தற்போதைய செய்திகள்

குழந்தைகளுக்கு டிஆர்எஸ் நாற்காலிகள் பொருத்திக் கொள்ளுங்கள்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இருக்கையுடன் பொருத்திக் கொள்ளக்கூடிய டிஆர்எஸ் நாற்காலிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை தாம் வலியுறுத்திய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நிகழ்ந்த விபத்தில் ஒரு வயது குழந்தை, வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு டிஆர்எஸ் நாற்காலிகளைப் பொருத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி போக்குவரத்து அமைச்சு பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

அமைச்சர் என்ற முறையில் நாங்கள் எதைச் சொன்னாலும், மக்கள் குறை கூறவே செய்வர். பரவாயில்லை. சகித்துக் கொள்கிறோம். மக்கள் தூற்றினாலும், வசைப்பாடினாலும் ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்று அந்தோணி தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து