Mar 19, 2026
Thisaigal NewsYouTube
தாய், மகள் கொலை: மூன்று அந்நிய நாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

தாய், மகள் கொலை: மூன்று அந்நிய நாட்டவர்கள் கைது

Share:

புக்கிட் மெர்தாஜாம், அக்டோபர்.24-

கடந்த அக்டேபார் 18 ஆம் தேதி சனிக்கிழமை பினாங்கு, ஜுருவில் உள்ள ஒரு வீட்டில் தாயாரும், மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Kampung Sekolah Juru-வில் நிகழ்ந்த இந்த இரட்டைக் கொலை தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை இரண்டு நபர்கள், கெடா கூலிமிலும், ஒருவர் சிலாங்கூரிலும் கைது செய்யப்பட்டதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸீ இஸ்மாயில் தெரிவித்தார்.

30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவரும் நாளை அக்டோபர் 25 ஆம் தேதி புக்கிட் மெர்தாஜாம், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுத்து வைக்கப்படுவதற்கான அனுமதியைப் போலீசார் பெறுவர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கொலை தொடர்பில் உயிரிழந்த மாதுவின் 57 வயது கணவரும் கைது செய்யப்பட்டார். எனினும் விசாரணைக்குப் பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக டத்தோ அஸிஸீ விளக்கினார்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட் ஆயுதம் வீட்டிற்கு பின்னால் கண்டு பிடிக்கப்பட்டதுடன், இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை