சரவாக்கின் செரியன் பகுதியில் காற்றுத் தரக் குறியீடு 500-ஐத் தாண்டி, அபாயகரமான நிலையை எட்டியதைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓப்பெங் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஆலோசனைகளைப் பரிசீலித்து அவசரநிலை பிரகடனத்துக்கு ஒப்புதல் அளித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரம் மற்றும் நலனைப் பாதுகாக்க மேலும் பயனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் பரவி வரும் புகைமூட்டமே செரியனில் காற்றுத் தரம் மோசமடையக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








