Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

Share:

கோத்தா பாரு, டிசம்பர்.02-

கிளந்தான், தானா மேரா, குவால் பெரிக், கம்போங் பாக்கு என்ற கிராமத்தில் நேற்று மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவர், 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படவுள்ளார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அந்த 63 வயதான ஆடவரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதி துன் ஃபாயேஸ் ஃபிக்ரி துன் அஸ்ருல் சைனி இன்று அனுமதி வழங்கினார்.

இவ்வழக்கானது கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில், தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் விசாரணை செய்யப்படவுள்ளது.

செலாயாங்கிலுள்ள உணவகத்தில் பணியாற்றி வந்த தனது மனைவிக்கு, வேறு ஒரு காதலன் இருப்பதாகச் சந்தேகித்த அந்த ஆடவர், இந்தக் கொடூரச் செயலைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, போதைப் பொருள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட அந்த ஆடவர், அதனைப் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது உறுதியாகியிருப்பதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் யூசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு