நாட்டில் நிலவிவரும் ஆசிரியர்கள் பற்றாக்குறைப் பிரச்னையைத் திர்ப்பதற்கு வெகு விரைவில் புதிய ஆசிரியர்களைப் பணிக்குச் அமர்த்தும் சிறப்பு திட்டத்தைக் கல்வி அமைச்சு அமல்படுத்தவிருப்பதாக துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹுய் இங் தெரிவித்துள்ளார்.
கட்டாயப் பணி ஓய்வு, விருப்புரிமை பேரில் பணி விலகல், பதவி உயர்வு, உயர் கல்வி பயில்வதற்கு விடுமுறை, மரணம் போன்ற பல்வேறு காரணங்களினால் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு நடைபெறும் என்று துணை அமைச்சர் விளக்கினார்.
தற்போது, 4.49 விழுக்காடு அல்லது 19 ஆயிரத்து 433 ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறையைத் தீர்க்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நாடவடிக்கைகளைக் கல்வி அமைச்சு எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, புதிய ஆசிரியர்கள் சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படவிருப்பதாக துணை அமைச்சர் லிம் ஹுய் இங் விளக்கினார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


