Mar 30, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் படுகொலை – மனைவி உள்பட நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

ஆடவர் படுகொலை – மனைவி உள்பட நால்வர் கைது

Share:

லஹாட் டத்து,நவம்பர் 04-

ஆடவர் ஒருவர் படுகொலை தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக அந்த நபரின்
மனைவி உட்பட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சபா, லஹத் டது, ஜாலான் பிஓஐகே, பத்து 3 இல் கடந்த
வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் 51 வயதுடைய ஆடவர்
உயிரிழந்ததாக லஹாட் டத்து மாவட்ட துணைப் போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் ஜிம்மி பன்யாவ் கூறினார்.

அன்றைய தினம் பிற்பகல் 12.45 மணியளவில் போலீசாரைத் தொடர்பு
கொண்ட அந்த பெண்மணி, தன் கணவர் படுகொலை செய்யப்பட்டத்
தகவலைத் தெரிவித்ததாக அவர் சொன்னார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்த ஆடவரின் உடலை பரி
சோதனை செய்த போது வலது கன்னம், தலையின் பின்புறம்
மற்றும் நெற்றியில் வெட்டுக் காயங்களும், வலது மார்பு, முதுகு
மற்றும் இடுப்பில் வீக்கமும் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக அந்த ஆடவரின் உடல்
லஹாட் டத்து மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டுச்
செல்லப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் ஊகங்களை வெளியிட
வேண்டாம் என பொது மக்களைக் கேட்டுக் கொண்ட அவர், இம்மரணம்
தொடர்பில் போலீஸ் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி
வருகிறது என்றார்..

Related News

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது