Mar 16, 2026
Thisaigal NewsYouTube
P-Hailing ஓட்டுநர்களின் ஊதியம் விவகாரம் - அரசாங்கம் தலையிட வேண்டும் !
தற்போதைய செய்திகள்

P-Hailing ஓட்டுநர்களின் ஊதியம் விவகாரம் - அரசாங்கம் தலையிட வேண்டும் !

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.18
ரைடர்களுக்குக் குறைவாக இருப்பதாகக் கூறப்படும் புதிய ஊதியக் கட்டண விகிதத்தை அறிமுகப்படுத்த p-hailing நிறுவனமான Grab இன் நடவடிக்கைகளில் தொடர்ந்து அரசாங்கம் தலையிடுமாறு மலேசிய விநியோக பங்காளிகள் சங்கம் வலியுறுத்தியது.

போக்குவரத்து, உணவு விநியோக நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் நலனுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், முழு p-hailing சேவைகளை உள்ளடக்கிய கொள்கைகள் அல்லது வழிகாட்டுதல்களை அரசாங்கம் உருவாக்கி வெளியிட வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்தது.

கிக் பொருளாதாரம் தொடர்பாக அரசாங்கத்தால் ஒரு குறிப்பிட்ட சட்டம் உருவாக்கப்படவில்லை என்றால், அது தொடர்பான சிக்கல்கள் தொடர்ந்து இழுபறியாகவே இருக்கும், மேலும் அரசாங்கத்தால் மட்டுமே கொள்கைகள் அல்லது வழிகாட்டுதல்களை உருவாக்கி வெளியிட முடியும் என்பதே தங்கள் கருத்து என அவர்கள் குறிப்பிட்டனர்.

"கிக் எகானமி ஆர்வலர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக கிக் பொருளாதார ஒழுங்குமுறைக் குழுவை விரைவாக செயல்படுத்துமாறு அச்சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியது. ரைடர்கள் எதிர்கொள்ளும் சமீபத்திய பிரச்சினைகள், குறிப்பாக ஊதிய விகிதங்கள் தொடர்பான பிரச்சினை குறித்து அரசாங்கம் குறுகிய கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Related News

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி