இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரங்களை தொட்டு பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் இனவாத கருத்துகளை பதிவிட்டு வரும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமருல் ஜமான் மாமத் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத்தில் பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றின் இடைத் தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் இனவாத தன்மையில் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவேற்றம் செய்து வருவதாக கூறப்படும் வேளையில் அவற்றை கண்காணிக்க போலீசார் சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளதாக கமாரூல் சாமான் மேலும் கூறினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


