மனித வள அமைச்சுக்கு தலைமையேற்றுள்ள தாம், அமைச்சின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு மூன்று கட்டமைப்பு கூறுகளுக்கு அழுத்தம் கொடுத்து இருப்பதாக மனித வள அமைச்சர் ஸ்தீவன் சிம் சி கியோங் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களுக்கான சமூக நலனை வலுப்படுத்துதல், திறன்களை மேம்படுத்துவது, உற்பத்தி திறனை அதிகரித்தல் ஆகியவை அந்த மூன்று முக்கிய கூறுகளாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில் மனித வள அமைச்சுக்கு தாம் தலைமையேற்றுள்ள அதேவேளையில் அமைச்சின் சிறப்புப்பணிகளுக்கான அதிகாரியாக தொழிற்சங்க வட்டாரத்தில் நன்கு அறிமுகமான சீ யீ சீ என்பவரை நியமித்து இருப்பதாக ஸ்தீவன் சிம் தெரிவித்தார்.
சீ யீ சீ, மலேசிய வங்கி பணியாளர்கள் தேசிய சங்கமான NUBE யின் பொருளாளராகவும் உள்ளார். தொழிற்சங்கத்தில் அவர் கொண்டுள்ள ஈடுபாடு, தொழிலாளர் நலன் சார்ந்த அம்சங்களை கருத்தில் கொள்வதற்கு உதவும் என்று Steven Sim குறிப்பிட்டார்.








