நேற்று நடைபெற்ற Penang Bridge International Marathon - னில் இராணுவ கணவர், போலீஸ் மனைவி தம்பதியர்கள் சிறந்த மலேசிய முழு மாரத்தான் (42km) ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவின் கீழ் முதலிடம் பிடித்துள்ளனர். 2019 ஆம் ஆண்டிலும் இத்தம்பதியர்கள் இச்சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
38 வயதுடைய நிக் ஃபாகாருடின் இஸ்மாயில், 37 வயதுடைய நோர் அமிலியா முசா தம்பதியர்கள் வருடாந்திர மாரத்தோனில் இரட்டை கோலை அடித்து சென்றதாக தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தம்பதியர்களாக தொடர்ந்து வெற்றி பெறுவதே குறிக்கோளாக வைத்திருப்பதாக நோர் அமிலியா தெரிவித்தார். இந்நிகழ்வில் தலா 5,000 வெள்ளி பரிசு தொகை, பதக்கங்கள், கோப்பைகள் இவர்கள் தட்டி சென்றுள்ளனர்.
இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் பிள்ளை இருந்தும் சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை இத்தம்பதியர் உணர்த்தியிருக்கின்றனர்.








