கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-
மலேசியாவிற்கான தொழிலாளர் தருவிப்புக் கும்பல் தொடர்பில் சட்டவிரோதப் பணமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அந்நாட்டின் 3 எம்.பி.க்கள் உட்பட 33 வங்காளதேசப் பிரஜைகளுக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. வங்காளதேசத்தின் நிதி குற்றவியல் புலன் விசாரணை போலீஸ் பிரிவின் உயர் அதிகாரியான முகமட் மொனிருஸாமான் என்பவர் இந்த போலீஸ் புகாரைச் செய்துள்ளார்.
இந்த மோசடியில் மலேசியப் பண மதிப்பில் 60.5 மில்லியன் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








