May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

காரின் இடிபாட்டில் சிக்கிய காரோட்டியை மீட்க கடும் போராட்டம்

Share:

பூச்சோங், பிப்.19-

மெர்சடீஸ் ரக கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் இடிபாடுகளுக்கு இடையே கால்கள் சிக்கி பெரும் அவதிக்குள்ளான கார் ஓட்டுநரை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் கடுமையாக போராடினர்.

இச்சம்பவம் நேற்றிரவு 11.23 மணியளவில் பூச்சோங், புக்கிட் பூச்சோங்கில் நிகழ்ந்தது. குறுக்கும், நெடுக்கமாக நீட்டிக் கொண்டு இருந்த காரின் சிதைந்த பாகங்களினால் இருக்கையை விட்டு வெளியேற முடியாமல், அந்த கார் ஓட்டுநர் வலியால் துடித்துப் போனதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

எனினும் மீட்புப்படையினர், பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தி 29 வயது மதிக்கத்தக்க கார் ஓட்டுநரை இடிபாடுகளிலிருந்து மீட்டதாக அகமட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News