Jun 29, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் பெருந்தோங்கில் பெண்ணிடம் நகை கொள்ளை முயற்சி: இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

புக்கிட் பெருந்தோங்கில் பெண்ணிடம் நகை கொள்ளை முயற்சி: இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.28-

சிலாங்கூர் மாநிலம், புக்கிட் பெருந்தோங்கில் நேற்று பல்பொருள் அங்காடி ஒன்றின் முன் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக இருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த போது, பல்பொருள் அங்காடியின் முன் அமர்ந்து செல்போனில் உரையாடிக் கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் அணிந்திருந்த நகையைக் கொள்ளையடிக்கும் முயற்சியானது நடந்துள்ளது.

கறுப்பு நிற அங்கியும், தலைக்கவசமும் அணிந்திருந்த நபர் சட்டென அப்பெண்ணின் கழுத்தில் இருந்த நகைகளை பறித்த போது அது கீழே விழுந்துள்ளது.

இந்நிலையில், அந்நபர் அங்கிருந்து மற்றொரு சந்தேக நபருடன் மோட்டாரில் தப்பிச் சென்றதாகவும் இப்ராஹிம் ஹுசேன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்