May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விபத்தில் மூவர் உயிரிழந்தனர், நால்வர் படுகாயம்

Share:

தங்காக், ஜன.25-

ஜோகூர், தங்காக், குனுங் லெடாங் தோட்டம் அருகில் ஜாலான் மூவார்-செகாமாட் சாலையின் 45 ஆவது கிலோ மீட்டரில் ஒரு காரும், SUV வாகனமும் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் மூவர் உயிரிழந்தனர். இதர நால்வர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் நேற்றிரவு 9.55 மணியளவில் நிகழ்ந்ததாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதெண்டன் ரோஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார்.

இதில் புரோடோன் வீரா ரக கார் 53 வயது ஓட்டுநரும், காரில் பயணித்த 56 வயது ஆடவரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

Toyota Harrier SUV வாகனத்தில் பயணித்த 61 வயது நபர், தங்காக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கொண்டு சென்ற போது உயிரிழந்ததாக ரோஸ்லான் குறிப்பிட்டார்.

இரு வாகனங்களிலும் பயணித்த தலா இருவர் கடும் காயங்களுடன் தங்காக் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரோஸ்லான் மேலும் கூறினார்.

Related News

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

செபாட் எண்ணெய்  துரப்பண மேடை  விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

செபாட் எண்ணெய் துரப்பண மேடை விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்