அரசியல் வைரிகளாக மாறியுள்ள முன்னாள் பிரதமர்களான துன் டாக்டர் மகாதீர் முகமதுவும், டான்ஸ்ரீ முகைதீன் யாசினும் தங்களின் அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதற்கு "மறப்போம் மன்னிப்போம்" என்ற அடிப்படையில் மீண்டும் ஒன்றிணையலாம் என்று கூறப்படுகிறது.
மலாய்க்காரர்களின் ஒருமைப்பாடு என்று கூறி, துன் மகாதீர் முன்னெடுத்துள்ள மலாய் பிரகடனத்திற்கு பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகைதீன் தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.
துன் மகாதீரும், முகைதீனும் ஒரு மேஜையில் அமர்ந்து பேசும் நேரம் இன்னும் கனியவில்லை என்ற போதிலும் மகாதீரின் மலாய் பிரகடனத்தை முகைதீன் ஆதரிப்பது, இருவரும் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறுவதற்கான ஒரு தொடக்கம் ஏற்பட்டுள்ளதாக முகைதீனின் பெர்சத்து கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


