ஜோகூர் மாநிலத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தலுக்கான 56 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, அனைத்து வேட்புமனு தாக்கல் மையங்களிலும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தகுதி பெற்ற வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.
இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டதும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள 14 நாட்கள் தேர்தல் பிரசார காலம் அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.
இந்தப் பிரசார காலம் வரும் ஜூலை 10-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நீடிக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.








