ஜோகூர், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தேர்தலையொட்டி தாம் நிகழ்த்திய உரை தொடர்பில் தமக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள போலீஸ் புகார் தொடர்பில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துடன் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக புக்கிட் அமான் போலீசார், அப்துல் அவாங்கை விசாரணை செய்யயவிருப்பதாக இன்று காலையில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக அவரின் அரசியல் செயலாளர் சியாஹிர் சுலைமான் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தவிருக்கும் விஷயத்தை அப்துல் ஹாடி அவாங்கிடம் தாம் தெரிவித்து விட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


