ஜோகூர், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தேர்தலையொட்டி தாம் நிகழ்த்திய உரை தொடர்பில் தமக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள போலீஸ் புகார் தொடர்பில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துடன் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக புக்கிட் அமான் போலீசார், அப்துல் அவாங்கை விசாரணை செய்யயவிருப்பதாக இன்று காலையில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக அவரின் அரசியல் செயலாளர் சியாஹிர் சுலைமான் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தவிருக்கும் விஷயத்தை அப்துல் ஹாடி அவாங்கிடம் தாம் தெரிவித்து விட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


