Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வயோதிகத் தம்பதியர் வீட்டில் இறந்து கிடந்தனர்
தற்போதைய செய்திகள்

வயோதிகத் தம்பதியர் வீட்டில் இறந்து கிடந்தனர்

Share:

ஈப்போ, அக்டோபர்.03-

வயோதிகத் தம்பதியர் ஈப்போ, டேசா லாங் இண்டாவில் உள்ள தங்கள் வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

டேசா லாங்கில் உள்ள ஒரு வீட்டில் வயோதிகத் தம்பதியர், அசைவின்றி கிடப்பதாக நேற்று காலையில் போலீசார் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.

போலீசார் வீட்டைச் சோதனையிட்ட போது வரவேற்பு அறையில் கதவுக்கு அருகில் முதியவரின் உடலும், வீட்டின் அறையின் படிக்கட்டில் மூதாட்டியின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

முதியவர் எந்தவொரு கடும் நோயிலும் பாதிக்கப்படவில்லை. ஆனால், அவரின் துணைவியார், கடந்த ஐந்து ஆண்டு காலமாக பார்க்கின்சன்ஸ் எனப்படும் நடுக்குவாத நோயினால் அவதியுற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டில் பலவந்தம் நடந்ததற்கான எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை. இருவரின் சடலங்களும், ஈப்போ, ராஜா பெர்மைசுரி பைனுன் மருத்துமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக ஏசிபி அபாங் ஸைனால் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்