பல நகர மையங்களில் வெளிநாட்டவர்களுக்கு வியாபார லைசன்ஸ்களை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகப் அலி பாபா எனும் நிறுவனத்தின் செயல்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்மொழியப்பட்ட சட்டமானது, பயன்படுத்தப்படலாம் என பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் ரஃபிசி ரம்லி கூறினார்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியத்தை வெளிநாட்டுவாசிகள் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அதனைக் கட்டுப்படுத்தும் சட்டத்தில் குறைபாடு இருப்பதாக, சமூக ஊடகப் பக்கத்தில் பயனர் ஒருவர் வினவியதற்குப் பதில் அளிக்கும் வகையில், ரஃபிசி ரம்லி இவ்வாறு பதிலளித்தார்.
சில துறைகளில் மலேசிய மக்கள் அதிக ஆர்வம் செலுத்தாததால், ஆண்டாண்டு காலமாக அவற்றில் வெளிநாட்டுவாசிகள் ஆளுமை செலுத்தி வந்துள்ளனர். இது நாட்டுடைய தேசியப் பிரச்னை. வெளிநாட்டுவாசிகள் தொடர்பான பிரச்னை கிடையாது என ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.
இப்போது நாம் சந்திப்பது ஆண்டாண்டு காலமாக நடந்தவையின் விளைவுகளே என்றார் அவர்.








