Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சனுசியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது
தற்போதைய செய்திகள்

சனுசியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது

Share:

பினாங்கு மாநிலம், கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்று கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமட் சனுசி முகமட் நூர் அறிக்கை வெளியிட்டது தொடர்ந்து, அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு முடிவடைந்ததை அரச மலேசிய போலீஸ் படை உறுதிப்படுத்தியது.

நேற்று, அலோர் ஸ்தார், விஸ்மா டாருல் டாருல் அமான்னில் உள்ள மந்திரி பெசார் அலுவலகத்தில், இவ்விவகாரம் தொடர்பான முகமட் சனுசியின் வாக்குமூலத்தை, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை பதிவு செய்ததாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் செயலாளர் டத்தோ நூர் சியா சட்டுடின் தெரிவித்தார்.

இதற்கிடையில், விசாரணையின் போது, முகமட் சனுசியிடம் 5 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் நூர் சியா சட்டுடின் குறிப்பிட்டார்.

Related News