Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கூலிமில் பல்கலைக்கழக மாணவர் நீரில் மூழ்கினார்
தற்போதைய செய்திகள்

கூலிமில் பல்கலைக்கழக மாணவர் நீரில் மூழ்கினார்

Share:

கூலிம், நவம்பர்.24-

இன்று காலை 8.30 மணி அளவில் கெடா, கூலிம், சீடிம் நீர் வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கூலிம் யுனிகேஎல் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி மாண்டார்.

21 வயதுடைய நோர் ஐரில் ஹஸிமி மன்சோர் என்ற மாணவரே இந்தச் சம்பவத்தில் மாண்டதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஹஜி ஸுல்கிஃப்லி அஸிஸான் அடையாளம் கூறினார்.

சீடிம் ஆற்றின் நீரின் மட்டம் உயர்ந்த நிலையில் அந்த பல்லைக்கழக மாணவர், தனது நண்பர்களுடன் அருகில் உள்ள நீர் வீழ்ச்சிக்கு குளிக்கச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.

நீரில் மூழ்கிய அந்த மாணவனை நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். எனினும் அவர்களால் நண்பரைக் காப்பாற்ற முடியாத நிலையில் அருகில் உள்ள கிராமத்து மக்களின் உதவியை நாடியதாக ஸுல்கிஃப்லி அஸிஸான் தெரிவித்தார்.

பின்னர் தீயணைப்புப் படயினரின் உதவியுடன் நீரில் மூழ்கிய அந்த மாணவனின் உடல் மதியம் 12.30 மணியளவில் மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.

உயிரிழந்த மாணவன், கிளந்தான், தாமான் மேராவைச் சேர்ந்தவர் என்று அவர் அவர் தெரிவித்தார்.

Related News

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு  கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்

அந்த ஆண் ஆசிரியர்கள் கல்விக்கழகங்களிலிருந்து வெளியேற்றப்படுவர்

அந்த ஆண் ஆசிரியர்கள் கல்விக்கழகங்களிலிருந்து வெளியேற்றப்படுவர்