Mar 15, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி விடுதியில் 2 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குப் பாலியல் வன்கொடுமை – போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

பள்ளி விடுதியில் 2 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குப் பாலியல் வன்கொடுமை – போலீஸ் விசாரணை

Share:

மாராங், டிசம்பர்.09-

திரங்கானு மாநிலம் மாராங்கில் உள்ள பள்ளி ஒன்றின் ஆண்கள் விடுதியில், இரண்டு மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் இரு புகார்களை அம்மாநில போலீசார் பெற்றுள்ளனர்.

இச்சம்பவத்திற்குக் காரணமானதாகச் சந்தேகிக்கப்படும் 16 வயதைச் சேர்ந்த இரு மாணவர்கள் குறித்து விடுதி பாதுகாவலர் நேற்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

17 வயதுடைய கற்றல் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி மாணவரை, கடந்த நவம்பர் 17-ஆம் தேதி, ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக 16 வயது மாணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி, ADHD எனப்படும் கவனக்குறைபாடு கொண்ட 13 வயது மாணவரை, ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக மற்றொரு 16 வயது மாணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இப்புகார்களின் அடிப்படையில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அம்மாணவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என மாராங் போலீஸ் தலைவர் சோஃபியான் ரெட்ஸுவான் தெரிவித்துள்ளார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்