May 20, 2026
Thisaigal NewsYouTube
போலியான தகவல்களை அமைச்சு கண்காணிக்கிறது
தற்போதைய செய்திகள்

போலியான தகவல்களை அமைச்சு கண்காணிக்கிறது

Share:

சட்டமன்றத் தேர்தலின் போது, பரவக்கூடிய போலியான தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டக்கூடியா கூறுகள் ஆகியவற்றை தடுப்பதற்கான முயற்சிகளை தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு தீவிரப்படுத்தும் என்று அதன் துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின் பிரச்சாரத்தின் போது, தவறான புரிதலையும் வெறுப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு, போலிச் செய்திகள் மறைமுகமாக வெளிவரக்கூடும் என்பதால், அவற்றை தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை அதன் சிறப்பு பணிக்குழு செய்து வருவதாக தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

Related News