Jun 19, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா ‘நிகரக் கடன் வழங்கும் நாடு’ என்ற நிலையைத் தொடர்கிறது: வெளிநாட்டு கடன்களைச் சந்திக்கும் திறன் வலுவாக உள்ளது – அன்வார் தகவல்
தற்போதைய செய்திகள்

மலேசியா ‘நிகரக் கடன் வழங்கும் நாடு’ என்ற நிலையைத் தொடர்கிறது: வெளிநாட்டு கடன்களைச் சந்திக்கும் திறன் வலுவாக உள்ளது – அன்வார் தகவல்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.19-

மலேசியா இன்னும் நிகரக் கடன் வழங்கும் நாடு என்ற தனது நிலையைத் தக்க வைத்திருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மலேசிய பெரு நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் வைத்திருக்கும் கணிசமான கையிருப்பு அல்லாத வெளிநாட்டு நாணயச் சொத்துகள் மற்றும் நாட்டின் வலுவான வெளிப்புற பொருளாதார நிலை தான் இதற்குக் காரணம் என்றும் அன்வார் நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

2025-ஆம் ஆண்டு, மூன்றாம் காலாண்டின் இறுதியில் மலேசியாவின் நிகர சர்வதேச முதலீட்டு நிலையான NIIP-ஆனது, 77.3 பில்லியன் ரிங்கிட் ஆகப் பதிவாகியுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான GDP-யின் 3.9 விழுக்காட்டிற்குச் சமமானது என்றும் அன்வார் தெரிவித்தார்.

இந்த நிலையானது மலேசியா இன்னும் நிகர கடன் வழங்கும் நாடாக உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்றும் நிதியமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.

வெளிநாட்டுக் கடன்களை நிர்வகிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அன்வார், நாட்டின், வெளிநாட்டுக் கடன்களைச் சந்திக்கும் திறனும், குறுகிய காலத்தில் அக்கடன்களைத் திருப்பிச் செலுத்தும் திறனும் “இன்னமும் வலுவாகவே உள்ளது” என வலியுறுத்தினார்.

Related News

நீதிமன்ற வளாக போலீஸ் அறையில் போதைப்பொருள் வைத்திருந்ததாக அதிகாரி மீது குற்றச்சாட்டு

நீதிமன்ற வளாக போலீஸ் அறையில் போதைப்பொருள் வைத்திருந்ததாக அதிகாரி மீது குற்றச்சாட்டு

மலேசியாவுக்கு நீண்டகால பெட்ரோல், எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க ரஷ்யா ஒப்புதல்

மலேசியாவுக்கு நீண்டகால பெட்ரோல், எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க ரஷ்யா ஒப்புதல்

யுஎம் பேராசிரியர் மீதான பாலியல் புகார் - விசாரணை அறிக்கையை பொதுவில் வெளியிட மாணவர் அமைப்பு வலியுறுத்து

யுஎம் பேராசிரியர் மீதான பாலியல் புகார் - விசாரணை அறிக்கையை பொதுவில் வெளியிட மாணவர் அமைப்பு வலியுறுத்து

தும்பாட்டில் 15 வயது சிறுமி பலமாகத் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

தும்பாட்டில் 15 வயது சிறுமி பலமாகத் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

போக்குவரத்து அபராதங்களை உயர்த்துதல் உட்பட  சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் புதிய திருத்தங்கள் பரிந்துரை

போக்குவரத்து அபராதங்களை உயர்த்துதல் உட்பட சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் புதிய திருத்தங்கள் பரிந்துரை

அரசியல் பாதுகாப்புக்காக அரண்மனையை கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது: ஓன் ஹஃபீஸ் காஸிக்கு மஹ்பூஸ் ஒமர் கண்டனம்!

அரசியல் பாதுகாப்புக்காக அரண்மனையை கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது: ஓன் ஹஃபீஸ் காஸிக்கு மஹ்பூஸ் ஒமர் கண்டனம்!