Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் சிறப்புத் திட்டம் இன்று தொடங்கியது
தற்போதைய செய்திகள்

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் சிறப்புத் திட்டம் இன்று தொடங்கியது

Share:

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில், நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிறைவு செய்வதற்கு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் சிறப்புத் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹூய் யிங் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி எனப்படும் கல்விச் சேவை ஆணையத்தின் வாயிலாக, ஆசிரியர் தொழிலுக்கு விண்ணப்பிக்கும் இந்த சிறப்புத் திட்டம் தொடங்கப்படுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தேசிய மொழி, ஆங்கிலம், இஸ்லாமிய ஆய்வியல், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 4 துறைகளில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக துணை அமைச்சர் விளக்கினார்.

முழு நேர ஆசிரியர் தொழில் அல்லது தற்காலிக ஆசிரியராக பணியாற்ற விரும்புகின்றவர்கள், கல்விச் சேவைக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் துறையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது கல்வித் துறை அல்லாத இதர துறைகளில் பட்டம் பெற்றவர்கள், கல்வி அமைச்சின் அகப்பக்கத்தின் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களைச் சமர்பிக்கும்படி துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹூய் யிங் கேட்டுக்கொண்டார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்