நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில், நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிறைவு செய்வதற்கு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் சிறப்புத் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹூய் யிங் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பி எனப்படும் கல்விச் சேவை ஆணையத்தின் வாயிலாக, ஆசிரியர் தொழிலுக்கு விண்ணப்பிக்கும் இந்த சிறப்புத் திட்டம் தொடங்கப்படுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய மொழி, ஆங்கிலம், இஸ்லாமிய ஆய்வியல், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 4 துறைகளில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக துணை அமைச்சர் விளக்கினார்.
முழு நேர ஆசிரியர் தொழில் அல்லது தற்காலிக ஆசிரியராக பணியாற்ற விரும்புகின்றவர்கள், கல்விச் சேவைக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் துறையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது கல்வித் துறை அல்லாத இதர துறைகளில் பட்டம் பெற்றவர்கள், கல்வி அமைச்சின் அகப்பக்கத்தின் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களைச் சமர்பிக்கும்படி துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹூய் யிங் கேட்டுக்கொண்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


