Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் சிறப்புத் திட்டம் இன்று தொடங்கியது
தற்போதைய செய்திகள்

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் சிறப்புத் திட்டம் இன்று தொடங்கியது

Share:

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில், நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிறைவு செய்வதற்கு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் சிறப்புத் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹூய் யிங் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி எனப்படும் கல்விச் சேவை ஆணையத்தின் வாயிலாக, ஆசிரியர் தொழிலுக்கு விண்ணப்பிக்கும் இந்த சிறப்புத் திட்டம் தொடங்கப்படுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தேசிய மொழி, ஆங்கிலம், இஸ்லாமிய ஆய்வியல், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 4 துறைகளில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக துணை அமைச்சர் விளக்கினார்.

முழு நேர ஆசிரியர் தொழில் அல்லது தற்காலிக ஆசிரியராக பணியாற்ற விரும்புகின்றவர்கள், கல்விச் சேவைக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் துறையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது கல்வித் துறை அல்லாத இதர துறைகளில் பட்டம் பெற்றவர்கள், கல்வி அமைச்சின் அகப்பக்கத்தின் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களைச் சமர்பிக்கும்படி துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹூய் யிங் கேட்டுக்கொண்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து