Jul 5, 2026
Thisaigal NewsYouTube
நீதிபதிகள் நியமன ஆணையத்தின் கூட்டக் குறிப்பு கசிந்ததா? ஓசாவின் கீழ் விசாரணை
தற்போதைய செய்திகள்

நீதிபதிகள் நியமன ஆணையத்தின் கூட்டக் குறிப்பு கசிந்ததா? ஓசாவின் கீழ் விசாரணை

Share:

கோலாலம்பூர், ஜூலை.14-

உயர்மட்ட நீதிபதிகள் நியமனங்கள் தொடர்பிலான நீதித்துறை ஆணையத்தின் கூட்டக் குறிப்புகள் கசிந்து விட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஓசா எனப்படும் ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடங்கியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

நீதித்துறையின் முக்கிய ஆவணமாக, ரகசியமாக இருக்க வேண்டிய அந்த பிரதானப் பத்திரத்தின் உள்ளடக்க ஆவணம் எவ்வாறு கசிந்தது என்பது குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு, தற்போது ஆராயப்பட்டு வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

ஜேஏசி எனப்படும் நீதித்துறை நீதிபதிகள் நியமன ஆணையத்தின் கூட்டக் குறிப்புகள் கசிந்ததாக போலீஸ் துறை புகார் பெற்று இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விசாரணையைப் போலீசார், நேரடியாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது என்பதுடன் இது உயர் மட்ட அளவிலான விசாரணையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று டத்தோ ஶ்ரீ காலிட் தெரிவித்தார்.

இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து சாட்சிகளும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று அவர் விளக்கினார்.

ஓசாவின் கீழ் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள், ரகசியத்தை வெளியிடுவது என்பது பெரும் குற்றமாகும். அந்த ரகசியக் காப்புச் சட்டத்தின் 8 ஆவது பிரிவின் கீழ் விசாரணை முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது