வரும் திங்கட்கிழமை நாடு தழுவிய நிலையில் அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபடவிருக்கும் வேளையில் நாட்டில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் அவற்றின் சேவை நிலைக்குத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனினும் ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னைகளை தீர்க்கும் வழிவகைகளைச் சுகாதார அமைச்சு தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அதன் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஒப்பந்த மருத்துவர்களின் வேலை நிறுத்த நடவடிக்கையினால் ஈடுபட்டால் நோயாளிகள், காயம் அடைந்தவர்கள் , குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் மருத்துவச் சேவையை பெறுவதில் பிரச்னையை எதிர்நோக்கக்கூடும் என்பதையும் அவர் விளக்கினார்.
ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அது வரையில் அவர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று அமைச்சர் டாக்டர் ஜாலிஹா கேட்டுக்கொண்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


