வரும் திங்கட்கிழமை நாடு தழுவிய நிலையில் அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபடவிருக்கும் வேளையில் நாட்டில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் அவற்றின் சேவை நிலைக்குத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனினும் ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னைகளை தீர்க்கும் வழிவகைகளைச் சுகாதார அமைச்சு தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அதன் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஒப்பந்த மருத்துவர்களின் வேலை நிறுத்த நடவடிக்கையினால் ஈடுபட்டால் நோயாளிகள், காயம் அடைந்தவர்கள் , குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் மருத்துவச் சேவையை பெறுவதில் பிரச்னையை எதிர்நோக்கக்கூடும் என்பதையும் அவர் விளக்கினார்.
ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அது வரையில் அவர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று அமைச்சர் டாக்டர் ஜாலிஹா கேட்டுக்கொண்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


