வரும் திங்கட்கிழமை நாடு தழுவிய நிலையில் அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபடவிருக்கும் வேளையில் நாட்டில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் அவற்றின் சேவை நிலைக்குத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனினும் ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னைகளை தீர்க்கும் வழிவகைகளைச் சுகாதார அமைச்சு தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அதன் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஒப்பந்த மருத்துவர்களின் வேலை நிறுத்த நடவடிக்கையினால் ஈடுபட்டால் நோயாளிகள், காயம் அடைந்தவர்கள் , குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் மருத்துவச் சேவையை பெறுவதில் பிரச்னையை எதிர்நோக்கக்கூடும் என்பதையும் அவர் விளக்கினார்.
ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அது வரையில் அவர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று அமைச்சர் டாக்டர் ஜாலிஹா கேட்டுக்கொண்டார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


