நாடு முழுவதும் 5 லட்சத்து 73 ஆயிரம் சொக்சோ சந்தாதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சேர வேண்டிய சமூக பாதுகாப்பு அனுகூலத் தொகை, அவர்களின் வங்கி கணக்கில் நேற்று முழுமையாக சேர்க்கப்பட்டு விட்டதாக சொக்சோவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஶ்ரீ முஹமாட் அஸ்மான் அசிஸ் தெரிவித்தார்.
குடும்பத்தலைவரை இழந்த மனைவிமார்கள், ஆதரவற்ற குழந்தைகள், மற்றும் விபத்து போன்ற பேரிடர்களில் சிக்கி, நிரந்தர மற்றும் தற்காலிக முடத்தன்மைக்கு ஆளானவர்கள் ஆகியோருக்கு இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக முஹமாட் அஸ்மான் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்கு சேர வேண்டிய அனுகூலத் தொகை முறையாக கிடைப்பதை உறுதி செய்வதற்கு இழப்பீட்டுத் தொகை அவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படுவதற்கு முன்னதாக சைபர் தாக்குதல் தொடர்பான பிரச்னைகள் களையப்பட்டதாக முஹமாட் அஸ்மான் தெரிவித்தார்.








