Mar 24, 2026
Thisaigal NewsYouTube
HRD CORP கழகத்தின் நிதி மீதான தனியார் தணிக்கை நிறுவனத்தின் அறிக்கை செப்டம்பரில் தாக்கல் செய்யப்பட வேண்டும்!
தற்போதைய செய்திகள்

HRD CORP கழகத்தின் நிதி மீதான தனியார் தணிக்கை நிறுவனத்தின் அறிக்கை செப்டம்பரில் தாக்கல் செய்யப்பட வேண்டும்!

Share:

கோலாலம்பூர், ஜூலை 11-

அந்நிய தொழிலாளர்களுக்கான லெவி கட்டணத்திலிருந்து பெறப்பட்ட 3.77 பில்லியன் வெள்ளி நிதியை, மனிதவள மேம்பாட்டு கழகம் - HRD CORP, முதலீட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியுள்ள விவகாரம்.

அக்கழகத்தின் நிதியை தணிக்கை செய்ய தனியார் நிறுவனத்தை நியமித்துள்ள மனிதவள அமைச்சை, தேசிய கணக்காய்வு செயற்குழு - PAC தலைவர் மாஸ் எர்மியாய்தி சம்சுதீன் வெகுவாக பாராட்டினார்.

HRD CORP நிதி விவகாரத்தில், ஏதும் மூடி மறைக்கப்படாது என உத்தரவாதம் அளித்திருந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் -ம்மின் கடப்பாட்டை அது காட்டுவதாக புகழ்ந்துரைத்த மாஸ் எர்மியாய்தி , வரும் செப்டம்பரில் அதன் அறிக்கை, தமது தரப்பிடம் தாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும் எதிர்பார்ப்பை முன்வைத்தார்.

Related News