எஸ்.பி.எம். தேர்வு முடித்த மாணவர்களில் 2023 கல்வியாண்டில் ஆறாம் படிவத்திற்கு செல்ல தகுதி பெற்றுள்ளவர்கள் தொடர்பான முடிவுகள் வரும் ஜுலை 3 ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது. இந்நிலையில் ஆறாம் படிவத்திற்கு செல்ல நாடு தழுவிய நிலையில் 65 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. இந்த மாணவர்கள் அனைவரும் 643 கல்வி மையங்களில் ஆறாம் படிவத்தை தொடர்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேவேளையில் 2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வு முடிவில் அதிருப்தியை கொண்டுள்ள மாணவர்கள், ஆறாம் படிவத்திற்கு செல்ல முடியாத நிலையில் தங்களின் தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்வதற்கு ss6.moe.gov.my என்ற அகப்ப்பக்கத்தில் விண்ணபிக்கலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


