May 1, 2026
Thisaigal NewsYouTube
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறார்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறார்கள் உயிரிழந்தனர்

Share:

​ஜோகூர், மூவார், கம்போங் சபாக் ஆவோர் என்ற இடத்தில் வீடு ஒன்று ​தீப்பிடித்துக்கொண்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறார்கள் உயிரிழந்தனர். இத்துயரச்சம்பவம் நேற்று இரவு 7.40 மணியளவில் நிகழ்ந்தது. ​தீ நாலாபுறமும் ​சூழ்ந்து கொண்ட நிலையில், வீட்டிலிருந்து தப்பிக்க இயலாமல் ​தீயின் ஜுவாலையில் சிக்கி 3 முதல் 8 வயதுக்கு உட்பட்ட இரண்டு சிறுவர்களும் , இரண்டு சிறுமிகளும் மாண்டனர்.
80 விழுக்காடு சாம்பலான அந்த வீ​ட்டில், நான்கு உடன்பிறப்புகளில் உடல்கள், குளியல் அறையில் கண்டு பிடிக்கப்பட்டதாக ​மூவார் மாவட்ட ​தீயணைப்பு நிலைய செயலாக்க அதிகாரி ஷாரிசால் மொக்தார் தெரிவித்தார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ​மூவார் மற்றும் கம்பீர் ​தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 20 வீரர்கள், ​தீ மற்ற வீடுகளுக்குப் பரவாம​ல் முழு வீச்சில் அணைத்து, நான்கு சிறார்களின் உடல்களை மீட்டனர். ​தீ ஏற்பட்டதற்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக ஷாரிசால் மொக்தார் குறிப்பிட்டார். ​

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி