Jan 18, 2026
Thisaigal NewsYouTube
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறார்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறார்கள் உயிரிழந்தனர்

Share:

​ஜோகூர், மூவார், கம்போங் சபாக் ஆவோர் என்ற இடத்தில் வீடு ஒன்று ​தீப்பிடித்துக்கொண்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறார்கள் உயிரிழந்தனர். இத்துயரச்சம்பவம் நேற்று இரவு 7.40 மணியளவில் நிகழ்ந்தது. ​தீ நாலாபுறமும் ​சூழ்ந்து கொண்ட நிலையில், வீட்டிலிருந்து தப்பிக்க இயலாமல் ​தீயின் ஜுவாலையில் சிக்கி 3 முதல் 8 வயதுக்கு உட்பட்ட இரண்டு சிறுவர்களும் , இரண்டு சிறுமிகளும் மாண்டனர்.
80 விழுக்காடு சாம்பலான அந்த வீ​ட்டில், நான்கு உடன்பிறப்புகளில் உடல்கள், குளியல் அறையில் கண்டு பிடிக்கப்பட்டதாக ​மூவார் மாவட்ட ​தீயணைப்பு நிலைய செயலாக்க அதிகாரி ஷாரிசால் மொக்தார் தெரிவித்தார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ​மூவார் மற்றும் கம்பீர் ​தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 20 வீரர்கள், ​தீ மற்ற வீடுகளுக்குப் பரவாம​ல் முழு வீச்சில் அணைத்து, நான்கு சிறார்களின் உடல்களை மீட்டனர். ​தீ ஏற்பட்டதற்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக ஷாரிசால் மொக்தார் குறிப்பிட்டார். ​

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!