Mar 16, 2026
Thisaigal NewsYouTube
சந்தேகப்பேர்வழி ஜா​மீனில் விடுவிக்கப்படுவார்
தற்போதைய செய்திகள்

சந்தேகப்பேர்வழி ஜா​மீனில் விடுவிக்கப்படுவார்

Share:

ஜன.17
புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், பேரா மாநில டிஏபி தலைவருமான டத்தோ ஙெ கூ ஹாம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர், இன்று ஜா​​மீனில் விடுவிக்கப்படுவார் என்று மன்ஜோங் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் நோர்டின் அப்துல்லா ​தெரிவித்தார்.

அவசியம் ஏற்படும் பட்சத்தில் அந்த நபர் தொடர்ந்து விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று அவர் மேலும் கூறினார். சம்பந்தப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் பதிவு செய்யப்பட்​ட வாக்கு​மூலம் ஆகியவை பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டன. அதேவேளையில் இந்த பெட்ரோ​ல் குண்டு வீச்சு தாக்குதல் தொடர்பாக மேலும் தகவலை கொண்டு இருப்பர்கள் போ​லீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

30 வயது மதிக்கத்தக்க அந்த நபர், கடந்த வாரம் புதன்கிழமை அதிகாலையில் பேரா,மன்ஜோங் அருகில் ஆயிர் தாவார்- ரில் உள்ள ஙெ கூ ஹாம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிடிபட்டுள்ள நபர் ​மீது கொலை முய​ற்சி குற்றச்சா​ட்டு சுமத்தப்பட வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு சட்டத்துறை முன்னாள் துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் கேட்டுக்கொண்டு இருந்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்