Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ரொஹிங்யா ஆடவர் வெட்டிக்கொலை
தற்போதைய செய்திகள்

ரொஹிங்யா ஆடவர் வெட்டிக்கொலை

Share:

இன்று காலையில் இரு ரொஹிங்யா ஆடவர்களுக்கு இடையில் நிகழ்ந்த வாய்த்தகராறு கைகலப்பில் முடிந்ததில் ஒருவர் மிக கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் கோத்தாபாரு, கம்போங் மெலோர் லாமாவில் காலை 8.30 மணியளவில் ஒரு வீட்டின் அருகில் உள்ள சோளத் தோட்டத்தில் நிகழ்ந்தது.
கொலை செய்யப்பட்ட ஆடவர், தனது நண்பரை தேடி அவரின் வீட்டிற்கு வந்த போது தகராறு ஏற்பட்டதாகவும், அவர்களுக்கு இடையிலான வாக்குவாதம் அண்டை வீடுகளில் கேட்கும் அளவிற்கு மிகச் சத்தமாக இருந்தது என்று சந்தேகப் பேர்வழியின் வீட்டின் அருகில் வசித்து வரும் தெங்கு நூர் அயுனி என்ற மாது தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி சோளத் தோட்டத்திலிருந்து கத்தியுடன் வெளியேறிய போதுதான் கொலை நடந்ததாக தாங்கள் உணர்ந்ததாக அந்த மாது மேலும் விவரித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகப் பேர்வழி ஒருவரை போலீசார் கைது செய்து இருப்பதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் சாக்கி ஹாருன் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு