Mar 12, 2026
Thisaigal NewsYouTube
24 மணி நேர இடைவிடாமல் ஜெயீலர் திரைப்படம்
தற்போதைய செய்திகள்

24 மணி நேர இடைவிடாமல் ஜெயீலர் திரைப்படம்

Share:

ஆகஸ்ட் 10 தொடங்கி மலேசிய முழுவதும் அமைந்துள்ள LFS cinema திரேடிங் திரையரங்குகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயீலர் திரைப்படம் வெற்றிகரமாக திரையீடு கண்டு வருகிறது.

ஜெயீலர் திரைப்பட திரையீட்டை ஒட்டி ரஜினியின் ரசிகர்களை பரவசத்தில் ஆள்தும் வகையில் லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் சினிமா, PJ மாநிலம் திரையரங்கில் இன்று ஆகஸ்ட் 19 மற்றும் நாளை ஆகஸ்ட் 20 ஆம் ஆகிய 2 தேதிகளில் 24 மணி நேரம் இடைவிடாமல் ஜெயீலர் மற்றும் ரஜினியின் மற்றொரு வெற்றிப்படமான பாட்ஷாவும் திரையிடப்படுகின்றன.

Five Star Trading- யின் ஏற்பாட்டில் இன்று காலை 11:15 மணிக்கு தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணி வரை இந்த இரு வெற்றிப்படங்களும் தொடர்ச்சியாக திரையிடப்படவிருக்கின்றன.

மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெரும் நோக்கில் 24 மணி நேரமும் இடைவிடாமல் திரையிடப்படவிருக்கும் ஜெயீலர் மற்றும் பாட்ஷா திரைப்படத்தை ரசிகர்கள் கண்டுக்களிக்கும் அதே வேளையில் இந்த மாபெரும் சாதனை விழாவில் தங்களின் பங்களிப்பும் உண்டு என்பதை நிரூபிக்க ரஜினியின் ரசிகர்கள் பெரியளவில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசிய வரலாற்றில் முதல்முறையாக நடைபெறவிருக்கும் இந்த அரிய சாதனை நிகழ்வில் ரஜினி ரசிகர்களை மகிழ்விக்க இலவச தேநீர் வழங்கப்படுவதுடன் தனித்துவமான போப்கோன் சாப்பிடும் போட்டியும், 30 வினாடி ரஜினி நடித்த திரைப்படத்தின் கதைக்கூறும் போட்டியும் நடைப்பெறவிருக்கின்றன. இப்போட்டியில் வெற்றிப் பெருகின்றவர்களுக்கு பரிசுகளும் காத்திருக்கின்றன.

இந்த மாபெரும் சாதனை விழாவில் மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு Five Star Trading கேட்டுக் கொள்கிறது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு