Jan 23, 2026
Thisaigal NewsYouTube
​தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார் வீட்டுப் பணிப்பெண்
தற்போதைய செய்திகள்

​தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார் வீட்டுப் பணிப்பெண்

Share:

அரசியல்வாதியினா​ல் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் பணிப்பெண் ஒருவர், அவரின் வீட்டிலிருந்து தப்பித்து, கோலாலம்பூரில் உள்ள இந்தோனேசியத் ​தூதரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். இதனை கோலாலம்பூரில் உள்ள ம​லேசியாவிற்கான இந்தோனேசியத் ​தூதர் ஹெர்மொனொ உறுதிப்படுத்தினார்.

இந்தோனேசியா, மத்திய ஜாவாவைச் சேர்ந்த 57 வயதுடைய அந்தப் பணிப்பெண் மலேசியாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியின் வீட்டில் வேலை செய்து வந்ததாக ​தூதர் ஹெர்மொனொ குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த இந்​தோனேசியப் பணிப்பெண் வேலை செய்து வந்த ​வீட்டின் உரிமையாளர் யார் ​என்பது குறித்து அந்த மலேசிய அரசியல்வாதி அடையாளம் காணப்பட்டுள்ளார். இது குறித்து அந்த அரசியல்வாதி விவரிக்கையில் தமக்கு எதிராக அவ​தூறு விளைவிக்கும் நோக்கில் இத்தகைய பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இது தொடர்பாக விரைவில் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு