Apr 10, 2026
Thisaigal NewsYouTube
வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை பொருளாதார செயல்பாடுகளை பாதிக்காது - அமைச்சர் உறுதி
தற்போதைய செய்திகள்

வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை பொருளாதார செயல்பாடுகளை பாதிக்காது - அமைச்சர் உறுதி

Share:

வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் அரசுப் பணியாளர்களுக்கான வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறையானது, நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை பாதிக்காது என பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா நாசிர் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறையானது, COVID-19 காலத்தில் அமல்படுத்தப்பட்ட நடைமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும், அப்போது வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நடைமுறையின் முக்கிய நோக்கம், பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல், உற்பத்தித்திறன் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அரசுப் பணியாளர்கள் தங்களின் வீடுகள் மற்றும் பிற இடங்களிலிருந்து பணியாற்றினாலும், அவர்களின் பொறுப்புகளை முழுமையாக மேற்கொள்வதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என்றும் அக்மால் நஸ்ருல்லா தெரிவித்துள்ளார்.

Related News

பெரு நிறுவன முறைகேடுகளில் MACC-ஐத் தொடர்பு படுத்தும் ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை / ஐஜிபி காலிட் இஸ்மாயில் தகவல்

பெரு நிறுவன முறைகேடுகளில் MACC-ஐத் தொடர்பு படுத்தும் ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை / ஐஜிபி காலிட் இஸ்மாயில் தகவல்

மலேசியா - தாய்லாந்து எல்லை காட்டுப் பகுதியில் 80 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

மலேசியா - தாய்லாந்து எல்லை காட்டுப் பகுதியில் 80 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

நீலாயில் இரு ஆயுதக் கொள்ளைச் சம்பவங்களில் ஐவருக்கு போலீஸ் வலைவீச்சு

நீலாயில் இரு ஆயுதக் கொள்ளைச் சம்பவங்களில் ஐவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோ சிறையிலிருந்து பாகிஸ்தான் கைதி தப்பியோட்டம் - தேடுதல் வேட்டை தீவிரம்

சுங்கை பூலோ சிறையிலிருந்து பாகிஸ்தான் கைதி தப்பியோட்டம் - தேடுதல் வேட்டை தீவிரம்

கெப்போங் 4.4 மில்லியன் கொள்ளையில் தொடர்பு: புக்கிட் அமான் போலீஸ் உயரதிகாரி மீது விசாரணை

கெப்போங் 4.4 மில்லியன் கொள்ளையில் தொடர்பு: புக்கிட் அமான் போலீஸ் உயரதிகாரி மீது விசாரணை

கைபேசியில் ஆபாச வீடியோக்கள்: பாச்சோக் பெண்ணிற்கு 2,000 ரிங்கிட் அபராதம்

கைபேசியில் ஆபாச வீடியோக்கள்: பாச்சோக் பெண்ணிற்கு 2,000 ரிங்கிட் அபராதம்