குவாந்தான்ஜன.12
பகாங் மாநில குடிநுழைவு அமலாக்க அதிகாரிகள், குவந்தானில் உள்ள உடம்புபிடி நிலையம் ஒன்றில் திடீர் சோதனையை மேற்கொண்ட போது சட்டவிரோதமாக தங்கியிருக்கலாம் என்று நம்ப்படும் 7 வெளிநாட்டுப் பெண்களை கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு 8.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் பிடிபட்ட அனைத்துப்பெண்களும் அரை நிர்வாணக்கோலத்தில் வாடிக்கையாளர்களின் உபசரணைப்பெண்களாக வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
Op Gegar என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த சோதனையில் 28 க்கும் 44 க்கும் இடைப்பட்ட வயதுடைய 7 தாய்லாந்துப் பெண்களும், ஒரு சீன நாட்டுப்பெண்ணும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








