Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கண்ணதாசனின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழா
தற்போதைய செய்திகள்

கண்ணதாசனின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழா

Share:

ஜன.9-

முனைவர் கவிஞர் இரவிபாரதியின் கண்ணதாசனின் மறுபக்கம் எனும் நூல் வெளியீட்டு விழா, நேற்று மாலையில் கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர். சோம அரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன், எழுத்தாண்மை ஏந்தல் பெரு.அ. தமிழ்மணி, டத்தோ கு. செல்வராஜு, டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான பெ. இராஜேந்திரன், ஞானசைமன், டாக்டர் ஞானபாஸ்கரன், பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ். ராஜேந்திரன், கரு.கார்த்திக் உட்பட முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்விற்கு சிகரம் வைத்தாப்போல் “ கண்ணதாசனைப் பற்றி..,” என்ற தலைப்பில் கண்ணதாசனின் தீவிர பற்றாளரும், இலக்கியப் பேச்சாளரும், மகப்பேறு மருத்துவ நிபுணருமான டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன் ஆற்றிய சிறப்புரை பலரின் கவன ஈர்ப்பாக அமைந்தது.

பலரின் மறுபக்கம் மறைவான ஒன்று . ஆனால் கண்ணதாசனின் மறுபக்கம் அப்பட்டமான ஒன்று. ஒளிவு மறைவு இல்லாத , ஆறடி வளர்ந்த அப்பாவித்தனம் கண்ணதாசன் .
உள்ளூர் பேருந்தில் உலக அழகியைக் காட்டியவன் கண்ணதாசன் . சாதாரண கறுப்பு வெள்ளை சினிமாவில் கற்கண்டுக் காவியங்களைத் தந்தவன் என்று டாக்டர் ஜெயபாலன் தமக்கே உரிய பாணியில் இலக்கிய உரை நிகழ்த்தினார்.

முன்னதாக, நூலாசிரியர் கவிஞர் இரவிபாரதிக்கு டத்தோஸ்ரீ எம். சரவணன் பொன்னாடைப் போர்த்தி சிறப்பு செய்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது