Dec 5, 2025
Thisaigal NewsYouTube
வழக்கறிஞர்கள் பேரணி வெற்றி, ஆயிரம் பேர் திரண்டனர்
தற்போதைய செய்திகள்

வழக்கறிஞர்கள் பேரணி வெற்றி, ஆயிரம் பேர் திரண்டனர்

Share:

புத்ராஜெயா, ஜூலை.14-

நீதித்துறையின் மாண்பைக் காப்பதற்கு இன்று புத்ராஜெயாவில் நடத்தப்பட்ட வழக்கறிஞர்கள் பேரணி, முழு வெற்றியைத் தந்துள்ளது என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் தெரிவித்துள்ளது.

இந்தப் பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பெரியளவில் திரண்டு, வழக்கறிஞர் மன்றம் முன்வைத்துள்ள 6 அம்சக் கோரிக்கைகளுக்கு முழு ஆதரவை நல்கியதாக மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் முகமட் எஸ்ரி அப்துல் வஹாப் தெரிவித்தார்.

நீதித்துறைக் கட்டடத்திலிருந்து பிரதமர் துறையின் சட்டத்துறைக் கட்டடத்திற்கு சுமார் 2.6 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மகஜர் ஒன்றைச் சமர்ப்பித்ததாக அவர் குறிப்பிட்டார்.

மகஜர் ஒப்படைப்பு நிகழ்வில் தாமும் இதர ஏழு பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக அவர் விளக்கினார்.

நீதிபதிகள் நியமன ஆணையத்தின் கூட்டக் குறிப்பு கசிந்தது, அரச விசாரணை அணையம் அமைப்பது, காலியான நீதிபதிகள் பதவிகள் நிரப்பப்படுவது, தலைமை நீதிபதியின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை முதலிய விவகாரங்களை வலியுறுத்தி மகஜர் சமர்ப்பிக்கப்பட்டதாக முகமட் எஸ்ரி குறிப்பிட்டார்.

எனினும் இதே போன்று மற்றொரு பேரணி நடத்துவதற்குத் தாங்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்