Jul 5, 2026
Thisaigal NewsYouTube
வழக்கறிஞர்கள் பேரணி வெற்றி, ஆயிரம் பேர் திரண்டனர்
தற்போதைய செய்திகள்

வழக்கறிஞர்கள் பேரணி வெற்றி, ஆயிரம் பேர் திரண்டனர்

Share:

புத்ராஜெயா, ஜூலை.14-

நீதித்துறையின் மாண்பைக் காப்பதற்கு இன்று புத்ராஜெயாவில் நடத்தப்பட்ட வழக்கறிஞர்கள் பேரணி, முழு வெற்றியைத் தந்துள்ளது என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் தெரிவித்துள்ளது.

இந்தப் பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பெரியளவில் திரண்டு, வழக்கறிஞர் மன்றம் முன்வைத்துள்ள 6 அம்சக் கோரிக்கைகளுக்கு முழு ஆதரவை நல்கியதாக மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் முகமட் எஸ்ரி அப்துல் வஹாப் தெரிவித்தார்.

நீதித்துறைக் கட்டடத்திலிருந்து பிரதமர் துறையின் சட்டத்துறைக் கட்டடத்திற்கு சுமார் 2.6 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மகஜர் ஒன்றைச் சமர்ப்பித்ததாக அவர் குறிப்பிட்டார்.

மகஜர் ஒப்படைப்பு நிகழ்வில் தாமும் இதர ஏழு பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக அவர் விளக்கினார்.

நீதிபதிகள் நியமன ஆணையத்தின் கூட்டக் குறிப்பு கசிந்தது, அரச விசாரணை அணையம் அமைப்பது, காலியான நீதிபதிகள் பதவிகள் நிரப்பப்படுவது, தலைமை நீதிபதியின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை முதலிய விவகாரங்களை வலியுறுத்தி மகஜர் சமர்ப்பிக்கப்பட்டதாக முகமட் எஸ்ரி குறிப்பிட்டார்.

எனினும் இதே போன்று மற்றொரு பேரணி நடத்துவதற்குத் தாங்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது